பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன் மற்றும் பலர் நடித்துள்ள 'நெற்றிக்கண்' படம் நாளை(ஆக.,13) ஓடிடியில் வெளியாகிறது. நயன்தாரா நடித்து இதற்கு முன்பு வெளியான 'மூக்குத்தி அம்மன்' படமும் ஓடிடி தளத்தில்தான் வெளியானது. அப்படத்தின் விளம்பரங்களில் நயன்தாரா புறக்கணிக்கப்பட்டாலும் அவருக்காக அப்படத்தைப் பார்த்தவர்கள் அதிகம்.
ஓடிடி மூலம் மக்களிடம் நேரடியாகச் செல்ல முடிகிறது என்பதைப் புரிந்து கொண்டதால் தான் 'மூக்குத்தி அம்மன்' புறக்கணிப்பு விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு 'நெற்றிக்கண்' படத்திற்காக டிவி பேட்டி வரை நயன்தாரா சென்றிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இப்படத்தில் நயன்தாரா கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். 2011ல் வெளிவந்த கொரியன் படமான 'பிளைன்ட்' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் இந்தப் படம்.
டிரைலரைப் பார்த்த போது மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த, 'சைக்கோ' படம் போலவே இருந்தது. இருந்தாலும், நயன்தாரா நடிப்பதால் 'நெற்றிக்கண்' படத்திற்கு தனி வரவேற்பு இருக்க வாய்ப்புள்ளது.
தனது முந்தைய வெளியீடான 'மூக்குத்தி அம்மன்' போலவே ஓடிடியிலும் 'நெற்றிக்கண்' படத்தையும் ஹிட் கொடுப்பாரா நயன்தாரா என்பது நாளை தெரிந்துவிடும்.