மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை |

சோசியல் மீடியாவில் நெகடிவ் கருத்துக்களை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடிக்கொண்டு வருபவர் நடிகை மீராமிதுன். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த உடனேயே சர்ச்சை வீடியோக்களை வெளியிடத் தொடங்கிய மீராமிதுன், அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்றிருந்த டைரக்டர் சேரனைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டார். அதன்பிறகு விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் மனைவிகளைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டு அவர்களது ரசிகர்களிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டார். அப்போது டைரக்டர் பாரதிராஜா உள்ளிட்டோரும் மீராமிதுனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களைப் பற்றி அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தாழ்த்தப்பட்ட மக்கள் மோசமான குற்றச்செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா தவறான வேலைகளையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை என அந்த வீடியோவில் ஒரு சமூகத்தைப் பற்றி தவறான கருத்து வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலாகி வருவதை அடுத்து அவரை நோக்கி கண்டன குரல்களும் பாய்ந்து கொண்டிருக்கிறது.