இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சோசியல் மீடியாவில் நெகடிவ் கருத்துக்களை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடிக்கொண்டு வருபவர் நடிகை மீராமிதுன். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த உடனேயே சர்ச்சை வீடியோக்களை வெளியிடத் தொடங்கிய மீராமிதுன், அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்றிருந்த டைரக்டர் சேரனைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டார். அதன்பிறகு விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் மனைவிகளைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டு அவர்களது ரசிகர்களிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டார். அப்போது டைரக்டர் பாரதிராஜா உள்ளிட்டோரும் மீராமிதுனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களைப் பற்றி அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தாழ்த்தப்பட்ட மக்கள் மோசமான குற்றச்செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா தவறான வேலைகளையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை என அந்த வீடியோவில் ஒரு சமூகத்தைப் பற்றி தவறான கருத்து வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலாகி வருவதை அடுத்து அவரை நோக்கி கண்டன குரல்களும் பாய்ந்து கொண்டிருக்கிறது.