என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சோசியல் மீடியாவில் நெகடிவ் கருத்துக்களை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடிக்கொண்டு வருபவர் நடிகை மீராமிதுன். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த உடனேயே சர்ச்சை வீடியோக்களை வெளியிடத் தொடங்கிய மீராமிதுன், அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்றிருந்த டைரக்டர் சேரனைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டார். அதன்பிறகு விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் மனைவிகளைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டு அவர்களது ரசிகர்களிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டார். அப்போது டைரக்டர் பாரதிராஜா உள்ளிட்டோரும் மீராமிதுனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களைப் பற்றி அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தாழ்த்தப்பட்ட மக்கள் மோசமான குற்றச்செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா தவறான வேலைகளையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை என அந்த வீடியோவில் ஒரு சமூகத்தைப் பற்றி தவறான கருத்து வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலாகி வருவதை அடுத்து அவரை நோக்கி கண்டன குரல்களும் பாய்ந்து கொண்டிருக்கிறது.