தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் | ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்த பல கோடி சம்பளம் | பாலிவுட்டில் வசூலைக் குவிக்கும் 'சாயரா' | 'நாட்டு நாட்டு' பாடகர் ராகுலுக்கு ரூ.1 கோடி பரிசு | நீண்ட இடைவெளிக்குப் பின் சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் பவன் கல்யாண் | பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! |
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு தளர்விற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்றது. அப்படப்பிடிப்பில் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு நடித்தார்கள்.
ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா ஆகியோருடன் புதுச்சேரி வந்து தங்கியிருந்து நடித்துக் கொடுத்தார். இப்போது அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு நடிக்க உள்ளார்களாம்.
'நவரசா' படத்திற்காகப் பேட்டிகள் கொடுத்த போது 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்திற்கான 70 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக மணிரத்னம் கூறியிருந்தார். அடுத்து ஐதராபாத்தில் நடிக்க உள்ளது தான் கடைசி கட்டப் படப்பிடிப்பாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
படப்பிடிப்பு முடிவடைந்த பின் தான் படத்தின் முதல் பார்வை, கதாபாத்திர அறிமுகங்கள் வெளியாகும் என்கிறார்கள்.