ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு படங்களைத் தொடர்ந்து மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து தனது அடுத்த படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்குகிறார் ராம். இதற்கு முன்பு தமிழில் நேரம், ரிச்சி படங்களில் நடித்துள்ளார் நிவின்பாலி. இதுகுறித்த தகவல் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில் தற்போது அஞ்சலி, சூரி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் மாநாடு படத்தை தயாரித்துள்ள சுரேஷ்காமாட்சி இந்த படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை யமைக்கிறார். சூரி, இந்தபடத்தில் காமெடியனாக இல்லாமல் நிவின் பாலிக்கு இணையான இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.