போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு படங்களைத் தொடர்ந்து மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து தனது அடுத்த படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்குகிறார் ராம். இதற்கு முன்பு தமிழில் நேரம், ரிச்சி படங்களில் நடித்துள்ளார் நிவின்பாலி. இதுகுறித்த தகவல் ஏற்கனவே வெளியானது.
இந்நிலையில் தற்போது அஞ்சலி, சூரி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் மாநாடு படத்தை தயாரித்துள்ள சுரேஷ்காமாட்சி இந்த படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை யமைக்கிறார். சூரி, இந்தபடத்தில் காமெடியனாக இல்லாமல் நிவின் பாலிக்கு இணையான இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.