தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
த பேமிலி மேன் மற்றும் சர்ச்சைக்குரிய த பேமிலி மேன் 2 ஆகிய தொடர்களை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகியோர் அடுத்து புதிய வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார்கள். அது த பேமிலி மேன் 3 தொடரா அல்லது புதிய தொடரா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
ஆனால், அத்தொடரில் நடிக்கும் ஷாகித் கபூர், ராஷி கண்ணா, இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே ஆகியோர் அது பற்றி அப்டேட் கொடுத்துள்ளனர்.
இடது கழுத்துப் பகுதியில் 2 டாட்டூக்களைக் காட்டும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, “செட்டில் காத்திருக்கிறேன், சீக்கிரம் அழையுங்கள் ராஜ், டிகே. விஜய் சேதுபதியுடன் பிரேமை ஷேர் செய்து கொள்ள காத்திருக்க முடியவில்லை. சாரி, ராஷி கண்ணா, உங்களுடன் செட்டில் ஏற்கெனவே பழகிவிட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ராஷி கண்ணா, “இருக்கட்டும், விஜய் சேதுபதிக்காக மன்னித்துவிடுகிறேன். எனக்கும் அதே போன்றுதான் இருக்கிறது. ராஜ் மற்றும் டிகேவைக் கேளுங்கள்,” என பதிலளித்துள்ளார்.
இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இருவரும் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “மக்கள் செல்வன் வீட்டினுள்... ப்ப்ப்பபபா... குமுதா ஹேப்பி அண்ணாச்சி,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால், விஜய் சேதுபதி யாருக்குமே இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.