அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

த பேமிலி மேன் மற்றும் சர்ச்சைக்குரிய த பேமிலி மேன் 2 ஆகிய தொடர்களை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகியோர் அடுத்து புதிய வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார்கள். அது த பேமிலி மேன் 3 தொடரா அல்லது புதிய தொடரா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
ஆனால், அத்தொடரில் நடிக்கும் ஷாகித் கபூர், ராஷி கண்ணா, இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே ஆகியோர் அது பற்றி அப்டேட் கொடுத்துள்ளனர்.
இடது கழுத்துப் பகுதியில் 2 டாட்டூக்களைக் காட்டும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, “செட்டில் காத்திருக்கிறேன், சீக்கிரம் அழையுங்கள் ராஜ், டிகே. விஜய் சேதுபதியுடன் பிரேமை ஷேர் செய்து கொள்ள காத்திருக்க முடியவில்லை. சாரி, ராஷி கண்ணா, உங்களுடன் செட்டில் ஏற்கெனவே பழகிவிட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ராஷி கண்ணா, “இருக்கட்டும், விஜய் சேதுபதிக்காக மன்னித்துவிடுகிறேன். எனக்கும் அதே போன்றுதான் இருக்கிறது. ராஜ் மற்றும் டிகேவைக் கேளுங்கள்,” என பதிலளித்துள்ளார்.
இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இருவரும் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “மக்கள் செல்வன் வீட்டினுள்... ப்ப்ப்பபபா... குமுதா ஹேப்பி அண்ணாச்சி,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால், விஜய் சேதுபதி யாருக்குமே இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.