இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' சரித்திரப் படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இந்தப் படம் குறித்து இதுவரையில் அதிகாரப்பூர்வமாக இரண்டு போஸ்டர்களை மட்டுமே வெளியிட்டுள்ளார்கள். சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புத் தளத்திலிருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆனது.
இன்று இயக்குனர் மணிரத்னத்தில் மனைவி சுஹாசினி சில படப்பிடிப்புப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். “அவர்கள் ஸ்பைடர் மேனோ, சூப்பர் மேனோ அல்ல ஆனால், கேமரா டெக்னீஷியன்ஸ், உருவத்தை மறையச் செய்வதற்கு அந்த ஆடைகள் பொருத்தமானவை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் மலை பின்னணியில் சண்டைக்காட்சியை படமாக்குவது போலத் தெரிகிறது. ஒரு ரசிகர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இயக்குனர் மணிரத்னத்தின் படப்பிடிப்புப் புகைப்படம் ஒன்றையும் அடுத்து வெளியிட்டார் சுஹாசினி.