காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சார்பாட்டா படத்தில் கமெண்ட்ரி கொடுக்கும் ரோலில் நடித்திருந்த டைகர் கார்டன் தங்கதுரை, சிறப்பாக பெர்பார்ம் செய்திருந்தார்.
தமிழில் வரும் ஸ்போர்ட்ஸ் படங்களில் கமெண்ட்ரி ரோல் செய்யும் நபர்களுக்கு படத்திலேயே பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அப்படியே சில படங்களில் முக்கியத்துவம் கொடுத்தாலும் திரையில் பெரும்பாலும் அவர்கள் காண்பிக்கப்படாததால் அந்த நபர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதும் அரிது தான். ஆனால், எந்த வகையான விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் ஆட்டக்களத்தை உயிர்ப்போடு வைத்திருப்பவர்கள் கமெண்டேட்டர்கள் தான். அது போல ஒரு படத்தின் விளையாட்டு காட்சியை அதே உணர்ச்சிகளோடு பார்வையாளர்களிடம் கடத்துபவர்களும் இவர்களே.
உதாரணத்திற்கு ஆடுகளம் படத்தை எடுத்துக் கொண்டல் சேவல் சண்டையிடும் களத்தை காட்டும் போதெல்லாம் அல்வா வாசுவின் மதுரை தமிழ் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த அளவுக்கு போட்டி நடக்கும் காட்சியை, நிஜ களத்தில் நின்று பார்ப்பது போன்ற உணர்வை அல்வா வாசு நமக்கு தந்திருப்பார்.
அது போலவே, தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சார்பட்டா படத்திலும் பாக்ஸிங் களத்தை நமக்கு லைவ்வாக காட்டுகிறார் டைகர் கார்டன் தங்கதுரை. சென்னை தமிழில் காட்சிக்கு ஏற்றார் போல், ஒட்டுமொத்த சண்டைக் காட்சிகளிலுமே அவரது குரல் தொடர்ந்து ஒலிக்கிறது. முந்தைய படங்களில் காமெடிக்காக அவர் கொடுத்த கமெண்ட்டுகள் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும், சார்பட்டா படத்தில் அவரின் கமெண்ட்ரி பாராட்டுகளை பெறுகிறது.
இருப்பினும் இதற்கான அங்கீகாரம் தங்கதுரைக்கு கிடைத்ததா என்றால் வழக்கம் போல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.




