மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சினிமாவிலும், சின்னத்திரையிலும் பெண்களை மையப்படுத்தி கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டு வருவதை குறித்து பேசிய நடிகை நக்ஷத்திரா பெண்கள் இனி ஒதுக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளார்.
சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளியான நஷத்திரா நாகேஷ், சீரியலிலும், சினிமாவிலும் நடிகையாகவும் நடித்து புகழ் பெற்றவர். இவர் தற்போது "தமிழும் சரஸ்வதியும்" என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்த இவர் அளித்த பேட்டி ஒன்றில் தொலைக்காட்சி தொடர்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் "டிவியில் மட்டுமல்ல, சினிமா மற்றும் பிற பொழுதுபோக்குகளிலும் சிறப்பாக எழுதப்பட்ட கதாபாத்திரங்களை நான் காண்கிறேன். பெண்களை மையமாக வைத்து எடுக்கும் கதாபாத்திரங்கள் இனி ஒதுக்கப்படாது என நம்புகிறேன். டி.வி மற்றும் சினிமா நம் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் சில சமயங்களில், திரையில் நாம் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறோம் என்பதற்கு நாமே பொறுப்பாகிறோம். ஆனால் நடிகர்களாகிய நாங்கள், நிகழ்ச்சியில் பதிவுசெய்ததையும், இயக்குனர் எங்களிடம் கேட்பதையும், ஸ்கிரிப்ட் கட்டளையிடுவதையும் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், தற்போது ஒரு நிகழ்ச்சி, ஸ்கிரிப்ட் தயாரிக்கப்படும் விதம் மாறிக்கொண்டிருக்கிறது" என கூறினார்.