இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமாவிலும், சின்னத்திரையிலும் பெண்களை மையப்படுத்தி கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டு வருவதை குறித்து பேசிய நடிகை நக்ஷத்திரா பெண்கள் இனி ஒதுக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளார்.
சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளியான நஷத்திரா நாகேஷ், சீரியலிலும், சினிமாவிலும் நடிகையாகவும் நடித்து புகழ் பெற்றவர். இவர் தற்போது "தமிழும் சரஸ்வதியும்" என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்த இவர் அளித்த பேட்டி ஒன்றில் தொலைக்காட்சி தொடர்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் "டிவியில் மட்டுமல்ல, சினிமா மற்றும் பிற பொழுதுபோக்குகளிலும் சிறப்பாக எழுதப்பட்ட கதாபாத்திரங்களை நான் காண்கிறேன். பெண்களை மையமாக வைத்து எடுக்கும் கதாபாத்திரங்கள் இனி ஒதுக்கப்படாது என நம்புகிறேன். டி.வி மற்றும் சினிமா நம் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் சில சமயங்களில், திரையில் நாம் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறோம் என்பதற்கு நாமே பொறுப்பாகிறோம். ஆனால் நடிகர்களாகிய நாங்கள், நிகழ்ச்சியில் பதிவுசெய்ததையும், இயக்குனர் எங்களிடம் கேட்பதையும், ஸ்கிரிப்ட் கட்டளையிடுவதையும் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், தற்போது ஒரு நிகழ்ச்சி, ஸ்கிரிப்ட் தயாரிக்கப்படும் விதம் மாறிக்கொண்டிருக்கிறது" என கூறினார்.