டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாளத்தில் தொண்ணூறுகளில் ஹீரோவாகவும் தற்போது குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் நடிகர் முகேஷ். கேரளாவின் சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார். தமிழில் ஜாதிமல்லி, ஐந்தாம்படை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் சரிதாவின் கணவர் என்கிற வகையில் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஓரளவு பிரபலமானவர். கடந்த 1988ல் சரிதாவை திருமணம் செய்து கொண்ட முகேஷ் 2011ல் அவரை விவாகரத்து செய்தார்.
அதன்பின் 2013ல் மெத்தில் தேவிகா என்கிற நாடக நடிகையை மறுமணம் செய்து கொண்டார். தற்போது எட்டு வருடங்கள் ஆன நிலையில் முகேஷிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார் மெத்தில் தேவிகா. சமீபத்திய பேட்டி ஒன்றில் இதை உறுதிப்படுத்தியும் உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “திருமணமாகி எட்டு வருடங்களாகியும் கூட என்னால் அவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. திரையுலக மற்றும் அரசியல் நிகழ்வுகளை வீட்டிலும் பிரதிபலிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.. ஆனால் பல வருடங்களாக அதுதான் தொடர்கிறது. இனியும் அவருடன் தொடர்ந்து வாழ முடியாது என்பதால் தான் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன். அதேசமயம் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எண்ணமும் இல்லை. அதனால் குடும்ப வன்முறை என்றெல்லாம் காரணம் சொல்லாமல், பரஸ்பரம் ஒப்புக் கொண்டு பிரிவதாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன்” என கூறியுள்ளார் மெத்தில் தேவிகா.




