வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாளத்தில் தொண்ணூறுகளில் ஹீரோவாகவும் தற்போது குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் நடிகர் முகேஷ். கேரளாவின் சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார். தமிழில் ஜாதிமல்லி, ஐந்தாம்படை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் சரிதாவின் கணவர் என்கிற வகையில் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஓரளவு பிரபலமானவர். கடந்த 1988ல் சரிதாவை திருமணம் செய்து கொண்ட முகேஷ் 2011ல் அவரை விவாகரத்து செய்தார்.
அதன்பின் 2013ல் மெத்தில் தேவிகா என்கிற நாடக நடிகையை மறுமணம் செய்து கொண்டார். தற்போது எட்டு வருடங்கள் ஆன நிலையில் முகேஷிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார் மெத்தில் தேவிகா. சமீபத்திய பேட்டி ஒன்றில் இதை உறுதிப்படுத்தியும் உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “திருமணமாகி எட்டு வருடங்களாகியும் கூட என்னால் அவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. திரையுலக மற்றும் அரசியல் நிகழ்வுகளை வீட்டிலும் பிரதிபலிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.. ஆனால் பல வருடங்களாக அதுதான் தொடர்கிறது. இனியும் அவருடன் தொடர்ந்து வாழ முடியாது என்பதால் தான் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன். அதேசமயம் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எண்ணமும் இல்லை. அதனால் குடும்ப வன்முறை என்றெல்லாம் காரணம் சொல்லாமல், பரஸ்பரம் ஒப்புக் கொண்டு பிரிவதாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன்” என கூறியுள்ளார் மெத்தில் தேவிகா.