175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது சர்கார் படம். இந்த படத்தில் அரசு வழங்கும் இலவச திட்டங்களை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
அரசின் திட்டங்களை தவறாக சித்தரிப்பதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தேவராஜன் என்பவர் புகார் அளித்தார். இதை தொடர்ந்து மத்திய குற்றப் பிரிவு துறையினர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஏற்கனவே உயர்நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது. வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில் வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் "தணிக்கை முடிந்த பிறகு தான் படம் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிந்த படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது " என்று தீர்பளித்து வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.