நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவானி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவகன், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அதனுடன் படத்திற்கான பிரமோஷன் பாடல் ஒன்றையும் 5 மொழிகளில் வெளியிட உள்ளார்கள். அது பற்றிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அப்பாடல் வெளியாக உள்ளது. அதற்கான படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தமிழில் அப்பாடலை இளம் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் பாட உள்ளார். அதற்காக சென்னை வந்து அவரைச் சந்தித்து சில தினங்களுக்கு முன்பு அது பற்றி பேசியுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் கீரவானி.
சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவைச் சந்தித்து அவருடன் உரையாடியது பற்றிய புகைப்படங்களை வெளியிட்ட கீரவானி, அன்று இரவே அனிருத்துடனான சந்திப்பு பற்றியும் டுவிட்டரில் பதிவிட்டார்.
“ஆர்ஆர்ஆர்' படத்திற்காக அனிருத்துடன் சிறப்பான சந்திப்பு நடந்தது. செயல்திறன், ஆற்றல், திறமை மற்றும் அவரது அற்புதமான குழுவினர் அவரது முக்கிய சொத்துக்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் பணிவானவர்” என அனிருத் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அந்த சந்திப்பு குறித்த புகைப்படம் எதையும் அவர் வெளியிடவில்லை.