22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவானி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவகன், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அதனுடன் படத்திற்கான பிரமோஷன் பாடல் ஒன்றையும் 5 மொழிகளில் வெளியிட உள்ளார்கள். அது பற்றிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அப்பாடல் வெளியாக உள்ளது. அதற்கான படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தமிழில் அப்பாடலை இளம் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் பாட உள்ளார். அதற்காக சென்னை வந்து அவரைச் சந்தித்து சில தினங்களுக்கு முன்பு அது பற்றி பேசியுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் கீரவானி.
சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவைச் சந்தித்து அவருடன் உரையாடியது பற்றிய புகைப்படங்களை வெளியிட்ட கீரவானி, அன்று இரவே அனிருத்துடனான சந்திப்பு பற்றியும் டுவிட்டரில் பதிவிட்டார்.
“ஆர்ஆர்ஆர்' படத்திற்காக அனிருத்துடன் சிறப்பான சந்திப்பு நடந்தது. செயல்திறன், ஆற்றல், திறமை மற்றும் அவரது அற்புதமான குழுவினர் அவரது முக்கிய சொத்துக்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் பணிவானவர்” என அனிருத் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அந்த சந்திப்பு குறித்த புகைப்படம் எதையும் அவர் வெளியிடவில்லை.