பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் பாடலை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து சென்றிருக்கும் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வென்று வா வீரர்களே என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து, பாடி வெளியிட்டுள்ளார்.
இந்த ஆல்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு கூடை பந்தாட்ட கழகம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த பாடலை முதல்வர் நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் யுவன் சங்கர் ராஜா பங்கேற்கவில்லை.