தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் நடிகைக்கு 102 கோடி அபராதம் | குருவாயூரப்பனை தரிசனம் செய்த அக்ஷய் குமார் | இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது ராஜஸ்தானில் எப்ஐஆர் பதிவு | லோகா படத்தில் சாண்டி பயன்படுத்திய வார்த்தைகள் : கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பட்ஜெட் 1100 கோடி? | ரூ.581 கோடி வசூல் பெற்ற 'சாயரா' | லோகா : மொத்தம் 5 பாகப் படங்கள் என இயக்குனர் தகவல் | லோகேஷை அடுத்து அனிருத்தைப் புகழும் ஏஆர் முருகதாஸ் | மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? |
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு கதை, வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவருடைய பேரன்கள் உதயநிதி, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாகவும் இருக்கிறார்கள்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று அறிவித்தார். அதன்பிறகு தமிழ்த் திரையுலகில் அனைவருமே தமிழில் மட்டுமே பெயர் வைத்தார்கள். ஆனால், ஜிஎஸ்டி வந்த பிறகு வரி விலக்கு என்பது இல்லாமல் போய்விட்டது. அதனால், மீண்டும் ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழித் தலைப்புகள் தமிழ் சினிமாவில் அதிகமாகிவிட்டது.
தற்போது கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வரான பிறகு, தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிச் சலுகை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகத்தில் எழுந்துள்ளது.
இந்நிலையில் அருள்நிதி நடிக்கும் மூன்று படங்களுக்கு வேற்று மொழிகளில் தலைப்புகளை வைத்துள்ளார்கள். அவர் தற்போது நடித்து வரும் ஒரு படத்தின் பெயர் 'டைரி'. இப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது. அடுத்து அவர் நடிக்க உள்ள புதிய படங்களின் அறிவிப்புகள் இன்று வெளியானது. அதில் ஒரு படத்தின் பெயர் 'டி பிளாக்', மற்றொரு படத்தின் பெயர் 'தேஜாவு'. இதில் 'தேஜாவு' என்பது பிரெஞ்சு மொழி.
அருள்நிதி தன்னுடைய படங்களுக்கு இப்படி வேற்று மொழிகளில் பெயர் வைக்கலாமா, என சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.