ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தற்போது திரை வடிவமாக்கிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் நடிகர் நடிகைகள் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், மலையாள நடிகரான ஜெயராம் இப்படத்தில் நடிக்கும் கேரக்டர் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வனில் மொட்டைத்தலையுடன் குடுமி வைத்தபடி தான் நடிக்கும் கெட்டப்பில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப் படத்தை கார்த்தி, ஜெயம்ரவியுடன் இணைந்து எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஜெயராம்.
அதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் என்ற நகைச்சுவை கலந்த வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.