பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 40வது படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்னர் காரைக்குடி, மதுரையில் நடைபெற்றது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்த நிலையில், ஜூலை 13 முதல் மீண்டும் சூர்யா 40 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த தகவலை அப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்னவேலு தெரிவித்துள்ளார். அதோடு, நீண்ட இடைவேளைக்குப்பிறகு கேமராவை பிடிப்பது சிறந்த உணர்வாக உள்ளது. இது நீண்ட ஷெட்யூல்டாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாடிவாசல் அப்டேட்
இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதாவது படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை(ஜூலை 16) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.