நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சினிமா உலகில் 1980 - 90களில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்த பல நடிகர், நடிகைகள் அவ்வப்போது சந்தித்து தங்களது கடந்த கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வதை கடைபிடித்து வருகிறார்கள். அந்தவகையில், 1980 காலகட்டத்தில் சினிமாவில் பிசியாக நடித்து வந்த நடிகர்- நடிகைகள் சிலருடன் தான் ஒரு வார இறுதி நாளில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.
அதோடு, அந்த சந்திப்பை நிறைய சந்தோசங்களுடனும், சிரிப்புகளுடனும் கழித்தோம் என்று பதிவிட்டு அதுகுறித்த ஒரு போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ராதிகா. அந்த போட்டோவில் ராதிகா சரத்குமாருடன் நடிகர் ரகுமான், அம்பிகா, ராதா, சுகாசினி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு உள்ளிட்டோர் உள்ளனர்.