நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
சினிமா உலகில் 1980 - 90களில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்த பல நடிகர், நடிகைகள் அவ்வப்போது சந்தித்து தங்களது கடந்த கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வதை கடைபிடித்து வருகிறார்கள். அந்தவகையில், 1980 காலகட்டத்தில் சினிமாவில் பிசியாக நடித்து வந்த நடிகர்- நடிகைகள் சிலருடன் தான் ஒரு வார இறுதி நாளில் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.
அதோடு, அந்த சந்திப்பை நிறைய சந்தோசங்களுடனும், சிரிப்புகளுடனும் கழித்தோம் என்று பதிவிட்டு அதுகுறித்த ஒரு போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ராதிகா. அந்த போட்டோவில் ராதிகா சரத்குமாருடன் நடிகர் ரகுமான், அம்பிகா, ராதா, சுகாசினி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு உள்ளிட்டோர் உள்ளனர்.