போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
செல்வராகவன் இயக்கத்தில் காதல்கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என சில படங்களில் நடித்துள்ளார் தனுஷ். அதையடுத்து புதுப்பேட்டை-2வில் அவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செல்வராகவனோ நானே வருவேன் என்ற பெயரில் தனுசை வைத்து புதிய படத்தை இயக்கப்போவதாக அறிவித்து போஸ்டர் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ் 43ஆவது படப்பிடிப்பு முடிவடைந்ததும் செல்வராகவன் இயக்கும் படத்தில் ஆகஸ்ட் முதல் நடிக்கப்போகிறார் தனுஷ். இந்நிலையில், இந்த படத்திற்கு வைத்துள்ள நானே வருவேன் என்ற தலைப்பு ரொம்ப சாதாரணமாக உள்ளது என்று தனுஷின் ரசிகர்கள் தொடர்ந்து டைட்டிலை மாற்றுமாறு சோசியல் மீடியாவில் கூறிவந்தனர்.
அதன் எதிரொலியாக நானே வருவேன் டைட்டிலை மாற்றும் ஆலோசனையில் செல்வராகவன் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ராயன் என்ற மாற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து செல்வராகவன்தரப்பில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.