அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
செல்வராகவன் இயக்கத்தில் காதல்கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என சில படங்களில் நடித்துள்ளார் தனுஷ். அதையடுத்து புதுப்பேட்டை-2வில் அவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செல்வராகவனோ நானே வருவேன் என்ற பெயரில் தனுசை வைத்து புதிய படத்தை இயக்கப்போவதாக அறிவித்து போஸ்டர் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ் 43ஆவது படப்பிடிப்பு முடிவடைந்ததும் செல்வராகவன் இயக்கும் படத்தில் ஆகஸ்ட் முதல் நடிக்கப்போகிறார் தனுஷ். இந்நிலையில், இந்த படத்திற்கு வைத்துள்ள நானே வருவேன் என்ற தலைப்பு ரொம்ப சாதாரணமாக உள்ளது என்று தனுஷின் ரசிகர்கள் தொடர்ந்து டைட்டிலை மாற்றுமாறு சோசியல் மீடியாவில் கூறிவந்தனர்.
அதன் எதிரொலியாக நானே வருவேன் டைட்டிலை மாற்றும் ஆலோசனையில் செல்வராகவன் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ராயன் என்ற மாற்றி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து செல்வராகவன்தரப்பில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.