மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா |
தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில் அதன் நிர்வாகிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமை செயலத்தில் சந்தித்தனர். அவரிடம் சங்கத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்கள்.
இந்த சந்திப்புக்கு பிறகு சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வரைச் சந்தித்தோம். அப்போது எங்களுடைய சங்கத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதியாக 50 லட்ச ரூபாய் வழங்கினோம்.
தற்போதைய எங்களது சிரமங்களைத் தமிழக முதல்வரிடம் சொன்னோம். கட்டாயம் எங்களுடைய அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார். விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி கொடுப்பார்கள், அதற்கான அறிவிப்பு விரைவில் இருக்கும் என நம்புகிறோம். அரசாங்கம் என்ன விதிகள் சொல்கிறதோ, அதற்குக் கட்டுப்பட்டு திரையரங்குகளைத் திறக்க ஆவலுடன் இருக்கிறோம்.
திரையரங்குகள் திறக்கப்பட்டால் தயாரிப்பாளர்கள் யாருமே ஓடிடி வெளியீட்டுக்குச் செல்ல மாட்டார்கள். திரையரங்குகள் மூடியிருப்பதால்தான் ஓடிடிக்குச் செல்கிறார்கள். ஆகையால், நாங்களும் எதுவுமே சொல்ல முடியாமல் இருக்கிறோம். திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகே ஓடிடி வெளியீட்டுக்குச் செல்லவுள்ளார்கள்.
கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டு கிடந்ததால் தொழில்வரி, சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். குறைந்தபட்ச மின் கட்டணத்தை குறைக்க வேண்டும், 8 சதவிகித கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வரிடம் மனுவாக கொடுத்துள்ளோம். என்றார்.