‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் |

சண்டக்கோழி 2 படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் ராம் பொத்னேனியை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார் லிங்குசாமி. இந்த படத்தில் உப்பெனா படத்தில் நடித்த கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு லூசிபர், திரிஷ்யம்-2 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்கயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை லிங்குசாமி இயக்கப்போவதாக அறிவித்த பிறகு, ஏற்கனவே பேசியபடி தங்களது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கிய பிறகுதான் இந்த படத்தை இயக்க வேண்டும் என்று லிங்குசாமிக்கு எதிரான ஒரு நடவடிக்கையை எடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. ஆனால் அவர்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூக முடிவை எட்டியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.