மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனது சகோதரி மகன் சசிவர்ஷனை (வயது 10) மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அண்ணா சாலையில் சென்றபோது பின்னால் இருந்த சிறுவன் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தான்.
உடனடியாக அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வலியால் துடித்த சிறுவன், சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் உளவியல் ரீதியான சிகிச்சை ஒன்றை மேற்கொண்டனர்.
சிறுவனுக்கு பிடித்த விஷயம் எதுவென்று விசாரித்தனர். அவன் விஜய்யின் தீவிர ரசிகன் என்றும், அவனுக்கு பிடித்தது பிகில் படம் என்றும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து டாக்டர்கள் செல்வோனில் பிகில் படத்தை சிறுவனுக்கு காட்டினர். அவன் அந்த படத்தை சிறுவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனுக்கு தேவையான சிகிச்சையை செய்து முடித்தனர்.