தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! |
இந்திய சினிமா என்றாலே அது பாலிவுட் தான் என உலக அளவில் ஒரு பெயர் இருக்கிறது. ஆனால், பாலிவுட்டை விட சிறந்த படங்கள் தென்னிந்திய அளவில் உருவாகி வருகிறது. இருப்பினும் தென்னிந்திய நடிகர்கள், நடிகைகளுக்கு பாலிவுட் என்பது அவர்களது பெரும் கனவாகவே இருக்கிறது.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஹிந்தியில் நடிக்கப் போனால் தான் சம்பளம் மிக அதிகமாகக் கிடைக்கும். சமீப காலமாக தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள் ஹிந்திப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ராஷ்மிகா மந்தானா ஹிந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததும் பாலிவுட்டில் ஒரு வீட்டை வாங்கினார். பூஜா ஹெக்டேவுக்கும் மும்பையில் வீடு உள்ளது. தற்போது நடிகர் ராம் சரண் ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.
அந்த வரிசையில் அடுத்ததாக சமந்தாவும் பாலிவுட்டில் வீட்டை தேடிக் கொண்டிருக்கிறாராம். 'த பேமிலி மேன் 2' வெப் தொடரில் நடித்த பிறகு அவருக்கு பல பாலிவுட் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். எனவே, மும்பையில் தங்கியிருந்தால் அந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கு வசதியாக இருக்கும் என யோசிக்கிறாராம்.
பாலிவுட்டில் எப்போதுமே தென்னிந்திய நடிகர்கள், நடிகைகளுக்கு அவ்வளவாக முக்கியத்தும் தர மாட்டார்கள். விதி விலக்காக நடிகைகளை மட்டும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பார்கள். இங்கிருந்து செல்பவர்களில் யாருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பது எதிர்காலத்தில் தெரிய வரும்.