ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் 2019ல் வெளியான படம் பிகில். இந்த படத்தின் கதை என்னுடையது என அம்ஜத் மீரான் என்பவர் 2019ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழக்கு செலவாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அம்ஜத் மீரான் வழக்கு செலவுத் தொகையை செலுத்தவில்லை. இதனால் அவரது வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து அம்ஜத் மீரான் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிமன்றம், அட்லி, அர்ச்சனா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது.