அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் |
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா, ஆண்டுதோறும் கோவாவில் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடையும். ஆனால் உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக 2020ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய விழா இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் நடந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான 52வது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் போட்டி பிரிவில் கலந்து கொள்ள விரும்பும் படங்கள் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
52வது சர்வதேச திரைப்பட விழாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். இந்த விழாவில் பிரபல இயக்குனர் சத்யஜித் ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து சுமார் 180 நாடுகளில் இருந்து 250 படங்கள் வரை இந்த விழாவில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.