இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணனான சத்ய நாராயணா, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் சுப்பிரமணிசாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் வெற்றி பெறுவாரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய் அரசியலில் வெற்றி பெறுவது ரொம்ப கஷ்டம் என்று கூறியுள்ளார்.
மேலும், பாஜகவின் அண்ணாமலை ஒரு புத்திசாலி. அவர் அரசியலில் நன்றாக வருவார். தமிழக அரசியலில் மிகப்பெரிய இலக்கை அடைவார் என்று கூறியிருக்கிறார். அதையடுத்து, கமல்ஹாசன் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ரஜினி எம்.பி ஆவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ரஜினிக்கு அதெல்லாம் தேவையில்லை. அவருக்கு கவர்னர் பொறுப்பே வந்தது. அதையே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவர் அரசியலில் பதவி வகிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்திருக்கிறார் சத்ய நாராயணா.
நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெறுவது ரொம்ப கடினம். ஆனால் பாஜகவின் அண்ணாமலை புத்திசாலி. அரசியலில் பெரிய இலக்கை அடைவார் என்று அவர் சொன்ன பதில் சோசியல் மீடியாவில் கடுமையாக விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.