மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான படம் அசுரன். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் தனுசுக்கு தேசிய விருதினை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் தற்போது இப்படம் நாரப்பா என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக்காகியுள்ளது. வெங்கடேஷ், பிரியாமணி நடித்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் நாரப்பாவை ஓடிடியில் வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு வெங்கடேஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆந்திராவிலுள்ள ஒரு ரசிகை நாரப்பாவை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கையில் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.