பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான படம் அசுரன். மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்படம் தனுசுக்கு தேசிய விருதினை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் தற்போது இப்படம் நாரப்பா என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக்காகியுள்ளது. வெங்கடேஷ், பிரியாமணி நடித்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று காலம் என்பதால் நாரப்பாவை ஓடிடியில் வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு வெங்கடேஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆந்திராவிலுள்ள ஒரு ரசிகை நாரப்பாவை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கையில் பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.