அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'டாக்டர்'. இப்படம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஓடிடி முடிவை எடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதே சமயம் , “வலிமை, டாக்டர், மாநாடு” உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தால் தியேட்டர்களுக்கு மக்கள் மீண்டும் வருவார்கள் என தியேட்டர்காரர்கள் காத்திருந்தார்கள்.
அவர்கள் காத்திருப்பிற்கு ஏமாற்றமளிக்கும் விதத்தில் 'டாக்டர்' படத்தின் ஓடிடி வெளியீடு அமைந்துள்ளதால் தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளார்கள். இது தொடர்பாக அவர்களது வாட்சப் குழுக்களில் இன்னும் ஒரு மாதத்தில் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி கொடுக்கும் எனத் தெரிகிறது. தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் படத் தயாரிப்பாளரிடம் பேசி, படத்தைத் தியேட்டர்களில் வெளியிட வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இதனிடையே காலையில் டாக்டர் படம் ஓடிடி வெளியீடு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. ஆனால் சற்றுநேரத்திற்கு முன் டாக்டர் தியேட்டரில் வெளியாகும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என டிரெண்ட் ஆனது.