மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் சீனியர் ஹீரோவான அர்ஜுன். இவருக்கு சொந்தமாக சென்னை, கெருகம்பாக்கத்தில் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் ஒரு பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோயிலை கடந்த சில வருடங்களாக கட்டி வருகிறார். மிகப் பெரும் ஆஞ்சநேயர் சிலை ஒன்றை அங்கு நிறுவியுள்ளார்.
அக்கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜுலை, 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அர்ஜுன். தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய ரசிகர்களுக்காக மூன்று மொழிகளிலும் அந்த அறிவிப்பில் பேசியுள்ளார்.
“என்னுடைய நீண்ட கால கனவுன்னு சொல்லலாம். தமிழகத்துல நாங்க கட்டியிருக்கிற ஆஞ்சநேயர் கோயில் வேலைகள் இப்படி முடிஞ்சிருக்கு. இந்த கோயிலோட கும்பாபிஷேகம் ஜுலை 1, 2 செய்யறதா முடிவு பண்ணியிருக்கோம். நிறைய பேரைக் கூப்பிட்டு இந்த பங்ஷனை ரொம்ப கிரான்டா பண்ணலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். ஆனா, இன்னைக்கு இருக்கிற நிலைமை கொரானோ, யாரையும் கூப்பிட முடியாத ஒரு சூழ்நிலை. இருந்தாலும் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் நீங்கலாம் இந்த பங்ஷனை மிஸ் பண்ணக் கூடாதுன்னு யு டியூப்ல லைவ் ஸ்ட்ரீம் அரேஞ்ச் பண்ணியிருக்கோம்,” என வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இது சம்பந்தமாக அர்ஜுன் சந்தித்து அவருக்கு அழைப்பு விடுத்திருப்பார் எனத் தெரிகிறது.