மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் சீனியர் ஹீரோவான அர்ஜுன். இவருக்கு சொந்தமாக சென்னை, கெருகம்பாக்கத்தில் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் ஒரு பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோயிலை கடந்த சில வருடங்களாக கட்டி வருகிறார். மிகப் பெரும் ஆஞ்சநேயர் சிலை ஒன்றை அங்கு நிறுவியுள்ளார்.
அக்கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜுலை, 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அர்ஜுன். தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய ரசிகர்களுக்காக மூன்று மொழிகளிலும் அந்த அறிவிப்பில் பேசியுள்ளார்.
“என்னுடைய நீண்ட கால கனவுன்னு சொல்லலாம். தமிழகத்துல நாங்க கட்டியிருக்கிற ஆஞ்சநேயர் கோயில் வேலைகள் இப்படி முடிஞ்சிருக்கு. இந்த கோயிலோட கும்பாபிஷேகம் ஜுலை 1, 2 செய்யறதா முடிவு பண்ணியிருக்கோம். நிறைய பேரைக் கூப்பிட்டு இந்த பங்ஷனை ரொம்ப கிரான்டா பண்ணலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். ஆனா, இன்னைக்கு இருக்கிற நிலைமை கொரானோ, யாரையும் கூப்பிட முடியாத ஒரு சூழ்நிலை. இருந்தாலும் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் நீங்கலாம் இந்த பங்ஷனை மிஸ் பண்ணக் கூடாதுன்னு யு டியூப்ல லைவ் ஸ்ட்ரீம் அரேஞ்ச் பண்ணியிருக்கோம்,” என வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இது சம்பந்தமாக அர்ஜுன் சந்தித்து அவருக்கு அழைப்பு விடுத்திருப்பார் எனத் தெரிகிறது.