ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மலையாள திரையுலகில், சக போட்டியாளர்களாக கருதப்படும் நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் ஈகோ பார்க்காமல் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பரிமாறிக் கொள்வதும், முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுகூடி தங்களது சந்தோசங்களை பரிமாறிக் கொள்வதுமாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், மலையாள சினிமாவில் இளம் நடிகர்களில் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும், பிரித்விராஜ், துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகிய மூவரும், தங்களது நட்பு வட்டத்தை ரொம்பவே பேணி காத்து வருகிறார்கள். அதற்கு மிக முக்கியமாக, பின்னணியில் இவர்களது மனைவிமார்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அப்படி சமீபத்தில் அவர்கள் தங்களது மனைவியருடன், ஒரு கெட் டுகெதர் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம் ஒன்றை பஹத் பாசிலின் மனைவியான நடிகை நஸ்ரியா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகிவருகிறது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து எல்லாம் எந்த விவரத்தையும் நஸ்ரியா வெளியிடாததால், ரசிகர்களின் பார்வைக்காக மட்டுமே இதை வெளியிட்டுள்ளார் என்று தெரிகிறது. அந்த வகையில் இந்த மூவரின் ரசிகர்களும் இவர்களது நட்பை பார்த்து ஆச்சரியப்பட்டு தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்




