ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள படம் மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம் .150 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ள இந்த படம் கடந்த 2 வருடமாக கொரோனா கால ஊரடங்கால் முடங்கி உள்ளது. இதனால் அதன் தயாரிப்பாளருக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படம் ஓணம் பண்டிகை தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி, 600 திரைகளில் வெளியிடப்பட்டுகிறது. இதற்காக படத்தின் தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்கள் சங்கம், மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார்.
படம் வெளியான 3 வாரங்கள் வரையில் வேறு எந்த படமும் தியேட்டரில் திரையிடப்படக்கூடாது. என்பதே அந்த ஒப்பந்தம். கேரளாவில் மூடப்பட்டிருக்கும் தியேட்டர்கள் திறக்கப்படும்போது மக்களை தியேட்டருக்கு கொண்டு வர இந்த படத்தால் தான் முடியும் என்பதால் இதற்கு இரண்டு சங்கங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. 3 தேசிய விருதுகள் பெற்றுள்ள இந்த படம் மலையாள சினிமாவின் கவுரவமாக பார்க்கப்படுகிறது.