திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. நடிகர்கள் பிரகாஷ்ராஜ் - விஷ்ணு மஞ்சு ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்தநிலையில் தற்போது நடிகை ஜீவிதா தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் மும்முனைப்போட்டியாக உருவெடுத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் நடிகை ஜீவிதா மற்றும் அவரது கணவரான நடிகர் ராஜசேகர் ஆகியோர் செயலாளர் மற்றும் நிர்வாக தலைவராக வெற்றி பெறறனர். ஆனால் ராஜசேகர் தற்போதைய தெலுங்கு நடிகர் சங்க தலைவரான நரேசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் ராஜசேகர் போட்டியிடாத நிலையில் ஜீவிதா மட்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்து ஆதரவு திரட்டத் தொடங்கியிருக்கிறார்.