தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. ஆனாலும், சில டிவி படப்பிடிப்புகள் ரகசியமாக நடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் ஜுன் 28ம் தேதிக்கான ஊரடங்கு தளர்வுகளில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும். படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியார்கள்/கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும். திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும். என, ஊரடங்கு தளர்வுகள் குறித்த செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகள் பழையபடி பரபரப்பாக ஆரம்பமாக உள்ளது. ஏற்கெனவே, ஐதராபாத்தில் சில படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இனி, சென்னையிலும் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும்.
தமிழகத்தில் தொற்று முழுவதுமாகக் குறைந்த பிறகுதான் தியேட்டர்கள் திறப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.