Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் தேர்வு ஆபத்தானவை - சூர்யா

19 ஜூன், 2021 - 19:34 IST
எழுத்தின் அளவு:
Suriya-oppose-NEET-exam

நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார். தற்போது கொரோனா காலத்திலும் நீட் தேர்வுக்கான ஆயத்த பணிகள் துவங்க உள்ளன. இந்நிலையில் ‛‛ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வு'' என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் சூர்யா.

அதில் அவர் கூறியிருப்பதாவது : ‛‛மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். ஏழைகளுக்கு ஒருவித கல்வியும், பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வியும் உள்ள சூழலில் தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது. நீட் நுழைத்தேர்வு வைக்கப்படவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை.

நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய நீட் தேர்வின் பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆகவே நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழுவிடம் neetimpact2021@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு வருகிற ஜூன் 23ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில் கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (30) கருத்தைப் பதிவு செய்ய
அரவிந்த்சாமியின் பிறந்தநாள் பரிசாக ரெண்டகம் போஸ்டர் வெளியீடுஅரவிந்த்சாமியின் பிறந்தநாள் பரிசாக ... மீண்டும் மோகன்லாலை இயக்கும் பிருத்விராஜ் : மீனா ஜோடி சேருகிறார் மீண்டும் மோகன்லாலை இயக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (30)

Jayaganth - Erode,இந்தியா
23 ஜூன், 2021 - 12:51 Report Abuse
Jayaganth தனியார் பள்ளிகள் கல்வித்துறை அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு வேண்டப்பட்ட மாணவர்களுக்கு மார்க்கிற்க்கு பேரம்பேசி ,பணத்தை பெற்றுக்கொண்டு தகுதிக்கு மேல் மதிப்பெண் வழங்கும் அவலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது........2020 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக ....+2 CBSE தேர்வின் விடைத்தாளில் உள்ள மதிப்பெண்ணையும்,... CBSE BOARD RESULT வெப்சைட்டில் வெளிவந்த மதிப்பெண்ணையும் ,உயர்நீதிமன்ற முன்னிலையில் ஓப்பீடு செய்தாலே பல உண்மைகள் வெளிவரும்.....,தனியார் பள்ளி நிர்வாகத்தினரால் போட்டுக்கொடுக்கும் மதிப்பெண்ணிற்க்கு மருத்துவஇடம் வேண்டும் என்று கேட்கிறீரேகளா சூர்யா....?
Rate this:
sugumar - Hosur,இந்தியா
21 ஜூன், 2021 - 12:01 Report Abuse
sugumar இல்லை, சூர்யா அவர்களே நீட் தேர்வு மாணவர்களுக்கும் மாநிலத்திற்கும் நல்லதுதான். நான் பக்கா தி மு க காரன் என் தாத்தா,அப்பா எல்லாருமே தி மு க தான். நான் பிறந்தது முதல் திமுகதான் நான் சிறுவயதிலே திமுக கொடியை தூக்கி கொண்டு ஓட்டு கேட்டவன்.இப்பொழுதும் திமுகவிற்காக உழைக்கிறவன். நீட் தேர்வு பற்றி தெரியவில்லை என்றால் நான் விவாதம் செய்ய தயாரக உள்ளேன்.
Rate this:
sugumar - Hosur,இந்தியா
21 ஜூன், 2021 - 11:44 Report Abuse
sugumar மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கு என் பணிவான வணக்கம். என்னுடைய மகள் +2 படித்து வருகிறார். நீட் வேண்டும் என்பதே என்னுடைய மற்றும் என் மகள் விருப்பம். நீட் வேண்டாம் என்று எந்த பெற்றோர்களும் கேட்கவில்லை, மாணவர்களும் கேட்கவில்லை. +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரில் எத்தனை பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் சேர்ந்தார்கள். நீட் வந்த பிறகு 7.5% இடஒதுக்கீட்டில் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு சென்றார்கள். +2 மதிப்பெண் அடிப்படையில் தனியார் பள்ளியில் இலட்சக்கனக்கான ரூபாய் கட்டி படித்து தான் மாணவர்கள் மருத்துவ இடம் பிடித்தார்கள். அரசு கல்லூரி மருத்துவ இடம் மற்றும் தனியார் கல்லூரி அரசு ஒதுக்கீடு இடம் அனைத்திலும் 99% தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள்தான் ஒதுக்கீடு பெற்றார்கள். நீட் வேண்டாம் என்றால் அகில இந்திய ஒதுக்கீடு 15%, எய்ம்ஸ், மற்றும் ஜிப்பர் போன்ற இடங்களில் தமிழ் மாணவர்கள் செல்லுவது மிகவும் கடினம். இதில் தேவையில்லாமல் "குழப்பத்தை ஏற்படுத்தவது அரசியலே" நீட் னால் தமிழகத்திற்கு லாபம்தான். 85% மாணவர்கள் நீட் வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். இதில் அனைத்து சாதி இட ஒதுக்கீடு முறையும் சரியாக பின்பற்றப்படுகிறது. இதில் கிராம புற ஏழை மாணவர்களுக்கு நீட் பயிற்சி அரசே ஏற்பாடே செய்யலாம் அல்லது இருப்பதை இன்னும் சரியான முறையில் சிறப்பாக செயல்படுத்தலாம். தற்போது உள்ள மாநில பாட திட்டத்திலே இருந்தே சுமார் 97% வரை நீட் வினா வருகிறது இதை 100% வருவதற்கு முயற்சி செய்யலாம் . +2 மதிப்பெண் அடிப்படையில் தனியார் கல்லூரிகள் 50% நிர்வாக இடஒதுக்கீட்டை கோடிக்கனக்கான ரூபாய்க்கு விற்றார்கள் அதுவும் +2 தேர்வு ஆகியிருந்தால் போதும். இது முற்றிலும் ஒழிக்கபட்டிருக்கிறது. +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் கனவு என்பது மிகவும் குறுகியது. ஏன் என்றால் ஒரு பள்ளியில் ஒரு மாணவனே அல்லது இரண்டு மாணவனோ மருத்துவ கனவு முடிந்துவிடும். நீட் தேர்வால் Biology படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கனவு உண்டாகும். 2017 யில் இருந்து நீட் தேர்வு முறையில் அனைத்து இடங்களும் நிரப்பபடுகிறது. இதில் மாநில பாட திட்டத்தில் படித்தவர்களே பெரும்பாலனவர்கள். 7.5% இடஒதுக்கீட்டை இன்னும் கொஞ்ச உயர்த்தினால் அரசு பள்ளியில் படிக்கும் கிராம புற ஏழை மாணவர்கள் கூடுதலாக மருத்துவ கல்லூரிக்கு செல்ல வாய்ப்பு இருக்கு. நீட் தேர்வால் தமிழ் நாட்டிற்கு எந்த இழப்பும் இல்லை. We Want Neet தமிழ் வாழ்க தமிழ் வெல்க
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
20 ஜூன், 2021 - 18:32 Report Abuse
Mirthika Sathiamoorthi கொரோனா தொற்றுடன் கல்லீரல்,சிறுநீரக பிரச்சினையுடன் தாய் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிசேரியன் மூலம் 3 குழந்தைகள் பிறந்தன. ஆபத்தான நிலையில் தாயும்,மூன்று குறைமாத குழந்தைகளும் தீவிர சிகிச்சையினால் காப்பாற்றப்பட்டனர்....மேற்சொன்ன செய்தி நடந்தது, AIIMSல இல்லிங்க..Corporate hospital இல்ல தென்தமிழ்நாட்டுல.தூத்துக்குடியில் .ஒரு அரசு மருத்துவமனைல..கொரோனா கர்ப்பிணி..கல்லீரல் கிட்னி ப்ரச்சனையுடன்..குறைமாதம்..எடை குறைவுடன்..3 குழந்தைகள் பிறந்து..நல்ல வகையில் காப்பாற்றி இருக்கும் அங்கே பணிபுரியும் மருத்துவர்கள் நீட் தேர்வெழுதி இருப்பாங்களா இல்லையா? நீட் தேர்வெழுத வில்லையென்றால் தேர்வெழுதி தங்களை திறமையான மருத்துவர்கள் என அவர்கள் நிரூபிக்கவேண்டிய தார்மீக பொறுப்பு அவங்களுக்கு இருக்கு..
Rate this:
Rags - dmr188330,இந்தியா
20 ஜூன், 2021 - 12:32 Report Abuse
Rags ஐயா உள்ளேன் ஐயா என்று சன் டிவிக்கு சூர்யா அறிவித்து உள்ளார். சினிமாவில் இவர் சம்பளம் கோடியில். மற்றவர் சம்பளம் ஆயிரத்தில். உங்கள் துறையை சரி செய்து விட்டு மற்றதை பற்றி பேசுங்கள். டூபாக்கூர் ஆசாமி
Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in