மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! | கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் |

நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார். தற்போது கொரோனா காலத்திலும் நீட் தேர்வுக்கான ஆயத்த பணிகள் துவங்க உள்ளன. இந்நிலையில் ‛‛ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட் தேர்வு'' என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் சூர்யா.
அதில் அவர் கூறியிருப்பதாவது : ‛‛மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். ஏழைகளுக்கு ஒருவித கல்வியும், பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வியும் உள்ள சூழலில் தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது. நீட் நுழைத்தேர்வு வைக்கப்படவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை.
நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய நீட் தேர்வின் பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஆகவே நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழுவிடம் neetimpact2021@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு வருகிற ஜூன் 23ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில் கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.