இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து, அப்படியே தெலுங்கு சினிமாவில் நுழைந்து அதிரடி காட்டும் நடிகைகளின் அடுத்த இலக்கு பாலிவுட் சினிமாவாகத்தான் இருக்கும்.. ஆனால் அசின் போன்ற ஒரு சிலருக்குத்தான் அந்த வாய்ப்பு சரியாக அமைந்தது. நயன்தாரா போன்ற சில நடிகைகள் பாலிவுட்டே வேண்டாம் என தென்னிந்திய சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் பிரேமம் படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சாய்பல்லவி தற்போது தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் அவருக்கு பிரபல நிறுவனம் ஒன்றிடமிருந்து ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிப்பதற்கான அழைப்பு தேடிவந்தது.. ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் சாய்பல்லவி. காரணம் தற்போது அவரது கவனம் முழுதும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் தான் இருக்கிறதாம்.