மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து, அப்படியே தெலுங்கு சினிமாவில் நுழைந்து அதிரடி காட்டும் நடிகைகளின் அடுத்த இலக்கு பாலிவுட் சினிமாவாகத்தான் இருக்கும்.. ஆனால் அசின் போன்ற ஒரு சிலருக்குத்தான் அந்த வாய்ப்பு சரியாக அமைந்தது. நயன்தாரா போன்ற சில நடிகைகள் பாலிவுட்டே வேண்டாம் என தென்னிந்திய சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் பிரேமம் படம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சாய்பல்லவி தற்போது தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் அவருக்கு பிரபல நிறுவனம் ஒன்றிடமிருந்து ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிப்பதற்கான அழைப்பு தேடிவந்தது.. ஆனால் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் சாய்பல்லவி. காரணம் தற்போது அவரது கவனம் முழுதும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் தான் இருக்கிறதாம்.