‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் ஒரு பாடலாசிரியராக, பாடகராக உலகம் முழுதும் பிரபலமானார் தனுஷ். அதை தொடர்ந்து சில வருட இடைவெளிக்கு பிறகு மாரி 2 படத்திற்காக தனுஷ் சாய்பல்லவி நடனத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் குழந்தைகளின் மனம் கவர்ந்த பாடலாக மாறி, தற்போது வரை, ஆயிரம் மில்லியன்கள் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மேஜை மீது வைத்திருக்கும் கோலிசோடா பாட்டில் ஒன்றை பார்த்தபடி தனுஷ் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்துடன், “ஹே.ய்... ஏ கோலிசோடாவே பாடல் மனதில் தோன்றிய தருணம்” என குறிப்பிட்டுள்ளார். கோலிசோடா பாட்டிலை பார்த்ததும் தான் அந்த வார்த்தையை பயன்படுத்தி பாடலை துவங்க வேண்டும் என தனுஷுக்கு தோன்றியது ஆச்சர்யம் தான்.