பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா திரையுலகில் மொத்தம் நாற்பது ஆண்டுகளை கடந்து விட்டார். கதாநாயகியாகவே 30 ஆண்டுகள் நீடித்துவரும் மீனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் தவறவிட்ட படங்கள், தனக்கு கிடைக்காமலேயே போன கதாபாத்திரங்கள் மற்றும் இனி வரும் காலத்தில் தான் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
“எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை ஒரு படத்தில் கூட கல்லூரி மாணவியாக நடிக்கவில்லை. அதேபோல நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட எனக்கு நடனத்தை மையப்படுத்திய படம் ஒன்றில் நடிக்க முடியாமல் போனதும் வருத்தம் தான். மலையாளத்தில் மோகன்லால்-மம்முட்டி இருவரும் இணைந்து நடித்த ஹரிகிருஷ்ணன்ஸ் படத்தையும், தமிழில் படையப்பா, தேவர்மகன் படங்களையும் தவறவிட்டதும் வருத்தம் தான்.
அதேபோல வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்.. முன்புதான் வில்லியாக நடித்தால் இமேஜ் கெட்டுவிடுமோ என பயந்தேன். இப்போது ரசிகர்களின் மனநிலை மாறிவிட்டதால் தைரியமாக வில்லத்தனம் காட்டும் கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்” என கூறியுள்ளார் மீனா.