'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
சமீபத்தில் சமந்தா நடித்த ‛‛தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ், ஈழத்தமிழர்களை மிகவும் மோசமாக சித்தரித்திருப்பதாக தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்கு ஆளானது. இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்தது குறிப்பாக இதில் நடித்த சமந்தாவும் இந்த கண்டனங்களுக்கு தப்பவில்லை.
இந்த நிலையில் பின்னணி பாடகி சின்மயி சமந்தாவின் நடிப்பை பாராட்டி, சமந்தா ஒரு ராக்ஸ்டார் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதனால் தற்போது தமிழ் உணர்வாளர்களின் கோபம் சின்மயி மீதும் திரும்பியுள்ளது. அதைத்தொடர்ந்து அவரும் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதையடுத்து தனது சோசியல் மீடியாவில், விரக்தி கலந்த கோபத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார் சின்மயி அதில், ”ஒருத்தரை பாராட்டி பதிவிட்டதற்காக இவ்வளவு துவேஷமா? இவ்வளவு கோபமா..? எனக்கு தெரிந்த ஒரு நபரை, நான் பலமுறை பாராட்டிய ஒரு நபரை பாராட்டுவதற்கு உரிமை இல்லையா? தயவு செய்து என்னை தனியாக விடுங்கள்.. நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கும் ஒரு எல்லை இருக்கிறது” என்று கூறியுள்ளார் சின்மயி.