அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் |
கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பலரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருபவர்களுக்காக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு ஆலோசனை சொல்கிறார்.
“என் தோழி ஒருவர் என்னிடம் சொன்னதை, நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயத்தில் அல்லது பணம் அல்லது அறிவு தருபவற்றில் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். வேறு ஒன்றும் தேவையில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்குத் திரையுலகத்தில் தனது அழகான சிரிப்பு மூலம் பல ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் மூலம் இங்குள்ள ரசிகர்களுக்கும் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நடிப்பாரா என்று நம் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவரோ தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்துவது போலத் தெரிகிறது.