ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பலரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருபவர்களுக்காக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு ஆலோசனை சொல்கிறார்.
“என் தோழி ஒருவர் என்னிடம் சொன்னதை, நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயத்தில் அல்லது பணம் அல்லது அறிவு தருபவற்றில் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். வேறு ஒன்றும் தேவையில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்குத் திரையுலகத்தில் தனது அழகான சிரிப்பு மூலம் பல ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் மூலம் இங்குள்ள ரசிகர்களுக்கும் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நடிப்பாரா என்று நம் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவரோ தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்துவது போலத் தெரிகிறது.