இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் முதல் முறையாக நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. தனுஷின் விருப்பத்தையும் மீறி இப்படம் ஓடிடி தளத்தில் ஜுன் 18ம் தேதி வெளியாக உள்ளது.
நேற்று படத்தின் இசை வெளியீட்டை முன்னிட்டு 'டுவிட்டர் ஸ்பேஸ்' மூலம் படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடினார். அதில் சுமார் 17 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்களாம். அமெரிக்காவிலிருந்து தனுஷும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது படத்தலைப்பை அறிவிக்காமல்தான் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். அப்போது படத்திற்கு 'சுருளி' என்று தலைப்பு வைத்துள்ளதாக பல செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கும் போது 'ஜகமே தந்திரம்' என்றுதான் வந்தது.
அது பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நேற்று பேசுகையில், “படத்திற்கு 'சுருளி' என்றுதான் தலைப்பைத் தேர்வு செய்து வைத்திருந்தோம். ஆனால், ஒருநாள் 'நினைத்தாலே இனிக்கும்' பாடலான 'ஜகமே தந்திரம்....' பாடலைக் கேட்ட போது அதுவே இப்படத்திற்குப் பொருத்தமான டைட்டிலாக இருக்கும் என்று நினைத்தேன். நான் ஒரு ரஜினி ரசிகர் என்பதாலும் அதையே வைத்துவிட்டேன்,” என்றார்.




