சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

பாகுபலி 2வைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தபடத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால் படப்பிடிப்பை ரத்து செய்தார். அதனால் அக்டோபரில் வெளியாக இருந்த ஆர்ஆர்ஆர் படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகிறது.
இந்த நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பாக ஒரு குறும்படத்தை இயக்கும் ஸ்கிரிப்ட் வேலைகளில் ராஜமவுலி இறங்கியிருப்பதாக டோலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளன. இந்த குறும்படம் லாக்டவுன் நேரத்தில் காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் எந்தமாதிரியெல்லாம் உயிரையும் பணயம் வைத்து அவர்கள் ரிஸ்க் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் கதையாக உருவாகிறதாம். இதற்காக முன்களப்பணியில் ஈடுபட்டுள்ள சில காவலர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளாராம் ராஜமவுலி.