இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பாகுபலி 2வைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தபடத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால் படப்பிடிப்பை ரத்து செய்தார். அதனால் அக்டோபரில் வெளியாக இருந்த ஆர்ஆர்ஆர் படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகிறது.
இந்த நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பாக ஒரு குறும்படத்தை இயக்கும் ஸ்கிரிப்ட் வேலைகளில் ராஜமவுலி இறங்கியிருப்பதாக டோலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளன. இந்த குறும்படம் லாக்டவுன் நேரத்தில் காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மற்றும் எந்தமாதிரியெல்லாம் உயிரையும் பணயம் வைத்து அவர்கள் ரிஸ்க் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் கதையாக உருவாகிறதாம். இதற்காக முன்களப்பணியில் ஈடுபட்டுள்ள சில காவலர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றுள்ளாராம் ராஜமவுலி.