ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் பெண் ஒளிப்பதிவாளர்கள் மிகவும் குறைவு. பி.ஆர்.விஜயலட்சுமிக்கு பிறகு வேகமாக வளர்ந்து வரும் ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமன். அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படித்து முடித்து பி.சி.ஸ்ரீராமிடம் 5 ஆண்டுகள் வரை உதவியாளராக பணியாற்றினார். அதன்பிறகு நாக் நாக் ஐ ஏம் லுக்கிங் டு மேரி என்ற ஆங்கில படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனார்.
இந்தியில் தடுகா, கன்னடத்தில் படவா ராஸ்கல், தமிழில் மணிரத்னம் தயாரித்த வானம் கொட்டட்டும் படங்களில் பணியாற்றிவர் இப்போது டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒரு ஒளிப்பதிவாளர் சினிமாவுக்கானவர் மட்டுமல்ல ஆவணப்படம், குறும்படம், வெப் சீரிஸ், விளம்பர படம், மியூசிக் வீடியோ என நிறைய இருக்கிறது. நல்ல ஒளிப்பதிவாளருக்கு இப்போதும் தேவை இருக்கிறது.
சினிமாவில் நடிக்க வரும் பெண்களை ஒப்பிடும்போது தொழில்நுட்ப துறைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெண்கள் சினிமா தொழில்நுட்பத்தை நல்ல முறையில் கற்று அந்த பணிக்கு வந்தால் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. சினிமாவில் ஆண் பெண் பேதமெல்லாம் மிகவும் குறைந்து விட்டது. என்றார்.