அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
ரன், சண்டக்கோழி, பையா என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் அடுத்து அவர் இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி-2 படங்கள் தோல்வியை தழுவின. இந்தநிலையில் தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான ராம் பொத்திநேனி என்பவரை வைத்து தெலுங்கிலேயே புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் லிங்குசாமி.
ஆக்சன் படமாக உருவாகும் இந்தப்படத்திற்காக, வலுவான வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ள லிங்குசாமி, அதில் நடிகர் மாதவனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. மாதவனின் திரையுலக பயணத்தில் கமர்ஷியல் அந்தஸ்து கொடுத்து அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது லிங்குசாமி இயக்கிய ரன் படம் தான். அதை தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய வேட்டை படத்திலும் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார் மாதவன்.
லிங்குசாமியின் நட்புக்காக வில்லனாக நடிக்க ஒப்புக்கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.