கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் 'மாநாடு' படத்தின் சிங்கிள் கடந்த மாதம் ரம்ஜான் தினத்தில் வெளியிட்ட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அப்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மறைந்ததால் அதைத் தள்ளி வைத்தார்கள்.
அதன்பின் எப்போது சிங்கிள் வரும் என்று சிம்பு ரசிகர்களும் காத்திருந்தார்கள். கடந்த வாரம் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் டுவிட்டரில் லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது சிங்கிள் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, யுவன் தான் தாமதம் செய்கிறார் என்று ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் சுற்றியது. அவற்றிற்குப் பதிலளிக்கும் விதமாக சற்று முன் யுவன் டுவீட் செய்துள்ளார். அதில், “மாநாடு, சிங்கிள் விரைவில் வெளியாகும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
யுவன் டுவீட்டிற்கு 'ஹாட்டின்' எமோஜியைத் தயாரிப்பாளரும், யுவன் டுவீட்டை இயக்குனர் வெங்கட் பிரபுவும் ரிடுவீட் செய்துள்ளார்கள்.