கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட பல்வேறு ஓடிடி நிறுவனங்கள் பல தயாரிப்பாளர்களிடம் பேசி வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் அலை திடீரென வந்ததால் தியேட்டர்கள் படங்களை வெளியிட முடிவு செய்து காத்திருந்தவர்கள் திண்டாடி வருகிறார்கள். தியேட்டர்களைத் திறக்க இன்னும் மூன்று மாத காலமாவது ஆகும் என்கிறார்கள். சில தயாரிப்பாளர்கள் ஓடிடி தளங்களில் தங்களது படங்களை வெளியிட பேசி வருகிறார்கள்.
ஆனால், ஓடிடி நிறுவனங்கள் பிரபலங்களின் படங்களை மட்டுமே குறி வைத்து தேடி வருகின்றன. மற்ற சிறிய பட்ஜெட் படங்களையோ, முன்னணியில் இல்லாத வேறு சில நடிகர்களின் படங்களையோ வாங்க மிகவும் தயக்கம் காட்டுவதாக பலர் குற்றம் சாட்டுகிறார்கள். கடந்த வருட கொரோனா பரவலின் போதும் இப்படியான நிலைதான் இருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒன்று இயக்குனர் பிரபலமாக இருக்க வேண்டும் அல்லது படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பிரபலமாக இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகளை விதிக்கிறதாம் ஓடிடி நிறுவனங்கள். சில சிறிய படங்களை பிரபலமாக உள்ள சில இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் மொத்த உரிமைகளையும் வாங்கி வைத்திருக்கிறார்களாம். அந்தப் படங்களுக்கு தயாரிப்பு செலவைக் காட்டிலும் இரு மடங்கு விலைகளைச் சொல்கிறார்களாம்.
அதே சமயம் ஓடிடி தளங்களில் நல்ல 'கன்டென்ட்' உள்ள படங்கள் வரவேற்பைப் பெறும் என்பதை முந்தைய வெளியீடுகள் நிரூபித்துள்ளது. தியேட்டர் வியாபாரத்தை விடவும் ஓடிடி வியாபாரத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.