100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! |
தமிழ், மலையாளத்தை தொடர்ந்து தற்போது முதன்முதலாக 'சார்லி 777' என்கிற படம் மூலம், கன்னட திரையுலகில் நுழைந்துள்ளார் நடிகர் பாபி சிம்ஹா. கன்னட உலகில் வளர்ந்து வரும் ஹீரோவான ரக்சித் ஷெட்டியும் இதில் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். கிரண்ராஜ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.
இந்தப்படம் குறித்து பாபி சிம்ஹா கூறும்போது, “நீண்ட நாட்களாகவே கன்னட படத்தில் நடிக்கும்படி அழைப்பு வந்துகொண்டுதான் இருந்தது.. திடீரென ஒருநாள் ரகசித் ஷெட்டி என்னை அழைத்து இந்த கதையை சொல்லி அவருடைய நண்பன் கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்கவேண்டும் என கேட்டபோது மறுக்க முடியவில்லை. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள நட்பை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது.
கன்னடம் பேசி நடிப்பதிலும் ஒன்றும் சிரமம் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, நானே கன்னடத்தில் டப்பிங்கும் பேசியுள்ளேன். கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு இன்னும் வசதியாக இருந்தது. மொத்த படமும் முடிவடைந்து பார்த்தபோது, கன்னடத்தில் இதைவிட வேறு நல்ல அறிமுகம் எனக்கு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை” என கூறியுள்ளார்..