டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ், மலையாளத்தை தொடர்ந்து தற்போது முதன்முதலாக 'சார்லி 777' என்கிற படம் மூலம், கன்னட திரையுலகில் நுழைந்துள்ளார் நடிகர் பாபி சிம்ஹா. கன்னட உலகில் வளர்ந்து வரும் ஹீரோவான ரக்சித் ஷெட்டியும் இதில் இன்னொரு ஹீரோவாக நடித்துள்ளார். கிரண்ராஜ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.
இந்தப்படம் குறித்து பாபி சிம்ஹா கூறும்போது, “நீண்ட நாட்களாகவே கன்னட படத்தில் நடிக்கும்படி அழைப்பு வந்துகொண்டுதான் இருந்தது.. திடீரென ஒருநாள் ரகசித் ஷெட்டி என்னை அழைத்து இந்த கதையை சொல்லி அவருடைய நண்பன் கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்கவேண்டும் என கேட்டபோது மறுக்க முடியவில்லை. மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள நட்பை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது.
கன்னடம் பேசி நடிப்பதிலும் ஒன்றும் சிரமம் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, நானே கன்னடத்தில் டப்பிங்கும் பேசியுள்ளேன். கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு நடந்ததால் எனக்கு இன்னும் வசதியாக இருந்தது. மொத்த படமும் முடிவடைந்து பார்த்தபோது, கன்னடத்தில் இதைவிட வேறு நல்ல அறிமுகம் எனக்கு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை” என கூறியுள்ளார்..