பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
தற்போது ஜூனியர் என்டிஆர்-ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது கொரோனா தொற்று பரவி வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி வெளியிட இருந்த ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜ மவுலி இயக்கும் படத்தில் மகேஷ்பாபு நடிப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான கதை எழுதும் பணியை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தொடங்கி விட்டாராம். தற்போது சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நடித்து வரும் மகேஷ்பாபு, இதையடுத்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் ராஜமவுலியுடன் இணைகிறார். இந்த படம் தான் ராஜமவுலியும், மகேஷ்பாபுவும் இணையும் முதல் படமாகும்.