வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி |
தற்போது ஜூனியர் என்டிஆர்-ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது கொரோனா தொற்று பரவி வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி வெளியிட இருந்த ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜ மவுலி இயக்கும் படத்தில் மகேஷ்பாபு நடிப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான கதை எழுதும் பணியை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தொடங்கி விட்டாராம். தற்போது சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நடித்து வரும் மகேஷ்பாபு, இதையடுத்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் ராஜமவுலியுடன் இணைகிறார். இந்த படம் தான் ராஜமவுலியும், மகேஷ்பாபுவும் இணையும் முதல் படமாகும்.