'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்த ருத்ரமாதேவி என்கிற படம் வெளியானது. குணசேகர் இயக்கிய இந்தப்படத்தில் ராணா கதாநாயகனாக நடிக்க, அல்லு அர்ஜுன் கோன கண்ணா ரெட்டி என்கிற, சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் குணசேகர், சமந்தா நடிக்கும் சகுந்தலம் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தநிலையில் அல்லு அர்ஜுன் ருத்ரமாதேவியில் நடித்த கோன கண்ணா ரெட்டி என்கிற கதாபாத்திரத்தை விரிவுபடுத்தி, அதையே ஒரு படமாக குணசேகர் இயக்க உள்ளார் என்றும் அதில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்றும், ஒரு செய்தி கடந்த சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்படி ஒரு எண்ணமே தனக்கு இல்லை என கூறியுள்ளார் குணசேகர்.
அதேசமயம், ருத்ரமாதேவி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு, ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டார் என்றும் இன்னொரு தகவல் கசிந்துள்ளது படத்திற்கு பிரதாப ருத்ரா என தலைப்பு வைக்கப்பட இருக்கிறதாம். காகதீய வம்சத்தின் கடைசி மன்னனான இந்த பிரதாப ருத்ரா, ராணி ருத்ரமாதேவியின் பேரன் ஆவாராம். இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம்.




