‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்த ருத்ரமாதேவி என்கிற படம் வெளியானது. குணசேகர் இயக்கிய இந்தப்படத்தில் ராணா கதாநாயகனாக நடிக்க, அல்லு அர்ஜுன் கோன கண்ணா ரெட்டி என்கிற, சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் குணசேகர், சமந்தா நடிக்கும் சகுந்தலம் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தநிலையில் அல்லு அர்ஜுன் ருத்ரமாதேவியில் நடித்த கோன கண்ணா ரெட்டி என்கிற கதாபாத்திரத்தை விரிவுபடுத்தி, அதையே ஒரு படமாக குணசேகர் இயக்க உள்ளார் என்றும் அதில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்றும், ஒரு செய்தி கடந்த சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அப்படி ஒரு எண்ணமே தனக்கு இல்லை என கூறியுள்ளார் குணசேகர்.
அதேசமயம், ருத்ரமாதேவி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு, ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டார் என்றும் இன்னொரு தகவல் கசிந்துள்ளது படத்திற்கு பிரதாப ருத்ரா என தலைப்பு வைக்கப்பட இருக்கிறதாம். காகதீய வம்சத்தின் கடைசி மன்னனான இந்த பிரதாப ருத்ரா, ராணி ருத்ரமாதேவியின் பேரன் ஆவாராம். இந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம்.