டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம். மர்மதேசம், ரமணி வெசஸ் ரமணி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த கீதா கைலாசம் தன் நடிப்பு வாழ்க்கையை நாடகத்தில் இருந்து தொடங்கினார். இந்திரா பார்த்தசாரதி எழுதிய சாரதா டீச்சர் நாவலை மேடை நாடகமாக்கி அதில் சாராதா டீச்சராக நடித்தார். அதன்பிறகு 20க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தார்.
கைலாசத்தின் மறைவுக்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். கட்டில் என்ற படத்தின் மூலம் அறிமுமாகி இருக்கிறார். இந்த படம் வெளிவரும் முன்பே பா.ரஞ்சித் இயக்கும் சர்பேட்டா பரம்பரை, நடிகர் அரவிந்த்சாமி இயக்கும் படம், பெப்பின் ஜார்ஜ் இயக்கும் படம் , ஒரு புதுமுகம் இயக்கும் படம் என தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரை, மற்றும் நாடகங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.