பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளது. சமீபத்தில் தான், தான் நடிக்க வேண்டிய மீதி காட்சிகள் அனைத்தையும் நடித்து கொடுத்துவிட்டு ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். எஜமான், வீரா, முத்து படங்களை தொடர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு இதில் மீனா, மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.
அண்ணாத்த படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் மற்றவர்கள் முன்னிலையில் தன்னை அதிரடியான கேள்வி கேட்டு திகைக்க வைத்தார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மீனா. இதுபற்றி அவர் கூறும்போது, “ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் திடீரென என்னருகில் வந்த ரஜினி சார், மீனா நீ எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துவிட்டாய் என கூறினார்.. பலரும் அருகில் இருந்த நிலையில் ரஜினி சார் அப்படி கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.
உடனே அவர் சிரித்துக் கொண்டே, “நாங்கள் எல்லோருமே இத்தனை வருடங்களில் மாறிவிட்டோம்.. ஆனால் நீ மட்டும் வீரா படத்தில் நடித்தபோது பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறாயே” என கூறி கலாட்டா பண்ணி, என்னை மட்டுமல்லாமல், அருகில் இருந்தவர்களையும் சிரிக்க வைத்தார்” என கூறியுள்ளார் மீனா.