விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளது. சமீபத்தில் தான், தான் நடிக்க வேண்டிய மீதி காட்சிகள் அனைத்தையும் நடித்து கொடுத்துவிட்டு ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். எஜமான், வீரா, முத்து படங்களை தொடர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு இதில் மீனா, மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.
அண்ணாத்த படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் மற்றவர்கள் முன்னிலையில் தன்னை அதிரடியான கேள்வி கேட்டு திகைக்க வைத்தார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மீனா. இதுபற்றி அவர் கூறும்போது, “ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் திடீரென என்னருகில் வந்த ரஜினி சார், மீனா நீ எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துவிட்டாய் என கூறினார்.. பலரும் அருகில் இருந்த நிலையில் ரஜினி சார் அப்படி கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.
உடனே அவர் சிரித்துக் கொண்டே, “நாங்கள் எல்லோருமே இத்தனை வருடங்களில் மாறிவிட்டோம்.. ஆனால் நீ மட்டும் வீரா படத்தில் நடித்தபோது பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறாயே” என கூறி கலாட்டா பண்ணி, என்னை மட்டுமல்லாமல், அருகில் இருந்தவர்களையும் சிரிக்க வைத்தார்” என கூறியுள்ளார் மீனா.