ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்ட நிலையை எட்டியுள்ளது. சமீபத்தில் தான், தான் நடிக்க வேண்டிய மீதி காட்சிகள் அனைத்தையும் நடித்து கொடுத்துவிட்டு ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். எஜமான், வீரா, முத்து படங்களை தொடர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு இதில் மீனா, மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.
அண்ணாத்த படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் மற்றவர்கள் முன்னிலையில் தன்னை அதிரடியான கேள்வி கேட்டு திகைக்க வைத்தார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மீனா. இதுபற்றி அவர் கூறும்போது, “ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் திடீரென என்னருகில் வந்த ரஜினி சார், மீனா நீ எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துவிட்டாய் என கூறினார்.. பலரும் அருகில் இருந்த நிலையில் ரஜினி சார் அப்படி கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.
உடனே அவர் சிரித்துக் கொண்டே, “நாங்கள் எல்லோருமே இத்தனை வருடங்களில் மாறிவிட்டோம்.. ஆனால் நீ மட்டும் வீரா படத்தில் நடித்தபோது பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறாயே” என கூறி கலாட்டா பண்ணி, என்னை மட்டுமல்லாமல், அருகில் இருந்தவர்களையும் சிரிக்க வைத்தார்” என கூறியுள்ளார் மீனா.