மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு காரணமாக இந்தியாவில் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 10,000 கோடிக்கும் மேல் படத் தயாரிப்புகளில் முடங்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகு தெலுங்குத் திரையுலகில் சில படங்கள் அதிக பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. அப்படியான படங்களில் மூன்று படங்களின் மூலம் மட்டுமே சுமார் 1000 கோடி முடங்கிப் போயுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் 300 கோடி, பிரபாஸ் நாயகனாக நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படம் மூலம் 350 கோடி, 'ஆதி புருஷ்' படம் மூலம் 500 கோடி இவற்றின் மூலம் மட்டுமே 1150 கோடி முடங்கியுள்ளது.
மேலும், பிரபாஸ் நடிக்கும் மற்றொரு படமான 'சலார்' மூலம் 150 கோடி மற்றும், ”புஷ்பா - 160 கோடி, ஆச்சார்யா - 150 கோடி, சர்க்காரு வாரி பாட்டா 100 கோடி, லிகர் - 100 கோடி” என கூடுதலாக 760 கோடி, இவற்றுடன் மேலும் சில முன்னணி நடிகர்களின் தெலுங்குப் படங்களைக் கணக்கில் கொண்டால் 2000 கோடியைத் தாண்டும்.
பெரிய படங்கள் எவ்வளவு நாள் தாமதமாகிறதோ அதற்கேற்றபடி அதன் வட்டியும் கூடுதலாகும். அதனால் படத்திற்கான செலவுகளில் இன்னும் சுமை ஏறும். கொரோனா அலை சீக்கிரமே முடிவுக்கு வந்து படங்களை எப்போது முடித்து வெளியிடப் போகிறோம் என தெலுங்குத் திரையுலகினர் அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.