நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'டிஎன்ஏ' ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் பெயரை பயன்படுத்தி மோசடி நடக்கிறது: அக்ஷரா ஹாசன் புகார் | மீண்டும் நாயகனாக நடிக்கும் நாசர் | பிளாஷ்பேக்: 3 மொழிகளில் படம் இயக்கிய ஸ்ரீப்ரியா | பிளாஷ்பேக்: வாழ்க்கை முழுக்க போராடிய வசந்தகோகிலம் | ஜப்பான் ரசிகர்கள் ரசித்து மகிழும் 'விக்ரம்' | விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? |
கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு காரணமாக இந்தியாவில் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 10,000 கோடிக்கும் மேல் படத் தயாரிப்புகளில் முடங்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகு தெலுங்குத் திரையுலகில் சில படங்கள் அதிக பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. அப்படியான படங்களில் மூன்று படங்களின் மூலம் மட்டுமே சுமார் 1000 கோடி முடங்கிப் போயுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் 300 கோடி, பிரபாஸ் நாயகனாக நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படம் மூலம் 350 கோடி, 'ஆதி புருஷ்' படம் மூலம் 500 கோடி இவற்றின் மூலம் மட்டுமே 1150 கோடி முடங்கியுள்ளது.
மேலும், பிரபாஸ் நடிக்கும் மற்றொரு படமான 'சலார்' மூலம் 150 கோடி மற்றும், ”புஷ்பா - 160 கோடி, ஆச்சார்யா - 150 கோடி, சர்க்காரு வாரி பாட்டா 100 கோடி, லிகர் - 100 கோடி” என கூடுதலாக 760 கோடி, இவற்றுடன் மேலும் சில முன்னணி நடிகர்களின் தெலுங்குப் படங்களைக் கணக்கில் கொண்டால் 2000 கோடியைத் தாண்டும்.
பெரிய படங்கள் எவ்வளவு நாள் தாமதமாகிறதோ அதற்கேற்றபடி அதன் வட்டியும் கூடுதலாகும். அதனால் படத்திற்கான செலவுகளில் இன்னும் சுமை ஏறும். கொரோனா அலை சீக்கிரமே முடிவுக்கு வந்து படங்களை எப்போது முடித்து வெளியிடப் போகிறோம் என தெலுங்குத் திரையுலகினர் அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.