திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் நடிப்பில் வெளியான படம் ‛ஆதி புருஷ்'. ராமாயணத்தை தழுவி 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் இடம் பெற்ற காட்சிகள், கதாபாத்திரங்களின் உருவங்கள் மற்றும் வசனங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. இதுதொடர்பாக சில ஊர்களில் படக்குழுவினர் மீது புகார்கள் கூட அளிக்கப்பட்டன. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ஆதிபுருஷ் படத்தினால் மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதற்காக நான் எனது நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன். பிரபு பஜ்ரங் பாலி(அனுமன்) எங்களை ஒற்றுமையாக வைத்து, நமது புனிதமான சனாதனத்திற்கும், நமது தேசத்துக்கும் பலம் தரட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.




