100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் நடிப்பில் வெளியான படம் ‛ஆதி புருஷ்'. ராமாயணத்தை தழுவி 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் இடம் பெற்ற காட்சிகள், கதாபாத்திரங்களின் உருவங்கள் மற்றும் வசனங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. இதுதொடர்பாக சில ஊர்களில் படக்குழுவினர் மீது புகார்கள் கூட அளிக்கப்பட்டன. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ஆதிபுருஷ் படத்தினால் மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதற்காக நான் எனது நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன். பிரபு பஜ்ரங் பாலி(அனுமன்) எங்களை ஒற்றுமையாக வைத்து, நமது புனிதமான சனாதனத்திற்கும், நமது தேசத்துக்கும் பலம் தரட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.